Skip to main content

Posts

Showing posts from August, 2018

"காற்றில் கலையப் போகிறோமா"

ஓராண்டு கழிந்துவிட்டது காற்றில் கலந்தது கனவு என்று சொல்லி ஒன்றும் செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஊமைகளாக. நீ ஏந்திக்கொண்ட சுடரினை விளக்கினில் ஏற்ற முடியாத மூடர்களாவே  இன்றும் இருக்கிறோம். நீ கொண்ட  நோக்கத்தினை அடைய முயற்சி பல செய்தாய் அது சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் தகர்ந்துப் போகவே உன் உயிரையே ஆயுதமாக்கினாய் அநீதிகளுக்கு எதிராக. காற்றில் கலந்து உன் கனவு மட்டுமே காலத்தில் கலந்து விட்டது உன் வாழ்வே சமூக நீதிக்கொரு பெயராக என்றும் அனிதா இருக்கும். இன்றளவும் உன்னை அரசியல் லாபத்திற்கு அடமானம் செய்கின்ற  பலர் இருக்கின்றனர் அற்ப பதறுகளாக. நீ தந்து சென்ற அறிவையும் பயன்படுத்தாமல் போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் தியாகத்தையும் நினைக்காமல் சிலரைத் தவிர்த்து பலர்சென்றுகொண்டிருக்கிறோம் பேதைகளாகவே. இந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு வரப்போகிறது. இன்றளவு மட்டும் எண்ணி விட்டு இவ்வாறே கடந்து செல்ல தான் போகிறோமா? ஆட்சியில் மாற்றம் வந்து விட்டால் இந்த அநீதி மாறிவிடுமா?ஆட்சி மாறினாலும் அநீதியை மாற விடுவார்களா? இதிலுள்ள அரசியல் கட்சிகளுகிடையே ஆனதா? ...

'வேலையில்லா நாட்கள் அது'

வெறுப்புகள் தினக்கூலியானது தனிமையின் கூட்டநெரிசல் கண்டேன் அன்பு கேள்விகளும் கேலியாய் உணர்ந்தேன் சோற்றுப்பருக்கைகளும் எச்சரித்தனர் தொலைக்காட்சி தொல்லையாய்த் தெரிந்தது இரவின் ஒளி தூக்கங்களை விழுங்கியது தெரியாத மனிதரின் பார்வைகளும் நெருடலாயானது என் அறை மட்டுமே என் ஊரானது கைபேசி அழைப்புகள் தயக்கத்தைத் தந்தது விளையாட்டு விருப்பமில்லாத ஒன்றாயானது பகலின் வெளிச்சம் இருளைக் கொடுத்தது அலைச்சலின் அழையா விருந்தாளியானேன் மின்னஞ்சல்களை எதிர்பார்த்து எதிர்காலம் என்றிருந்தேன் எண்ணங்களில் வறுமை கொண்டிருந்தேன் ஏமாற்றங்களை எதர்த்தமாய்ப் பழகிக்கொண்டேன் விழாக்காலங்களும் விரக்தி அளித்தது முதல்முறை அப்பா கொடுத்தக் காசு கடனாய்த் தெரிந்தது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களையும் வாழ்வின் எதிர்பாரா வினோதங்களையும் மனிதர்களின் பல முகங்களையும் அனுபவித்து கற்றுக்கொண்ட நாட்கள். பொறுமையை விதையாக்கி நாளும் முயற்சியை நீராக ஊற்றி வந்தால் யாவும் விருட்சம் ஆகும் என்பதை உய்த்துணர்ந்த நாட்களும் அதுவே.             ...

'பழக்கப்பட்ட என் தந்தை'

சொல்லப்படாத காதல் கொண்டாடப்படாத திருவிழா அறிவிக்கப்படாத வெற்றி வணங்கப்படாத தாய் போற்றப்படாத அறம் அரவணைக்கப்படாத குழந்தை பாடப்படாத கவிதை பருகப்படாத அமிழ்தம் நினைக்கப்படாத தியாகம் பயிலப்படாத தமிழ் பாராட்டப்படாத திறமை ஊதியம் வழங்கப்படாத உழைப்பு         வர்ணிக்கப்படாத பேரழகு வியக்கப்படாத அதிசயம் மகுடம் சூடப்படாத அறிவு பிறர் நலனுக்காகவே வாழ பழக்கப்பட்ட என் "தந்தை".                                      ~இராசை இராம்

அன்பிற்கும் உண்டோ பிரிவு

பிரிவு என்னும் தொற்றுப்பிணி பதைப்பவர் மனங்களையே தாக்கிடுமே பண்பட்ட உள்ளங்களை நெருங்கையிலே பரவ முடியாமல் தோற்றிடுமே! பிரிவு என்னும் தோற்றமது பிறர் பார்வைக்கு பெரிதாய் தெரிவதுவே பாசம் நிறைந்த மனங்களுக்களுக்கு பிரிவு என்பது வெறும் கானல் நீரே! பிரிவு என்னும் படிநிலையை பற்றிக்கொண்ட மனிதருக்கும் பயன்படாது என்று உணர்த்திடவே பாடம்  எடுத்திடும் தனிமை நிலையே! பிரிவு என்னும் சூழ்நிலையை பெரிதாய் எண்ண ஒன்றுமில்லை பொறுத்துக் காலம் கடத்திவிட்டால் பிளவும் மறைந்துச் சென்றிடுமே பெருமை வந்து  நம்மில் சேர்ந்திடுமே!

"நான் பெற்ற விருதுகள்"

நான் பெற்ற விருதுகள் பற்பல இருந்தாலும் அவற்றில் இங்கே சிற்சில. நான் பெற்ற முதல் விருது. நான் பெற்றது விருது என அறியா நாள் முதலே என்னை வந்தடைந்த விருது அது நான் எண்ணும் எண்ணம் யாவும் நன்கறிந்த விருதும் அதுவே நான் இன்பம் துன்பம் பகிர நாடும் முதல் விருதும் அவ்விருதே மகிழ்வைத் தர வந்த விருது அது மற்றார் மனம் வருந்தா வண்ணம் மனங்குளிர எப்பொழுதும் சுற்றதார்க்கு மகிழ்வை மட்டும் தரவல்ல நற்விருது அது. பகுத்தறிவை காட்டி  என் பார்வைதனை மாற்றி வாழ்வில் பண்பட வைத்த விருது அது. பழகிய நாள் முதலே இனம்புரியா புரிதலுண்டு அதுவுடனே பிறருக்கது புரிந்திடாது, அவ்விருது புரிந்த செயலில் என்னை பிரமிக்க வைத்து விட்ட விருது அது. உற்ற கருத்தில் மாறுபாடு இருக்கும் ஊரைச் சுற்றவில்லையெனில் கோபம் கொள்ளும்  விருது அது ஊரே சுற்றி எதிர்ப்பினும் உடன் இருந்து ஊரை எதிர்க்கும் விருதும் அதுவே நட்பென்ற சொல்லிற்கு விளக்கமாய் நிற்கும் விருது இரண்டு நீங்கலான உறவிற்கு நீண்டு வரும் விருதுகளும் அதுவே கேலி பல செய்தாலும் கேள்வி எதும் கேட்காமல் கேட்டதை உடனே செய்துதரும் வி...