ஓராண்டு கழிந்துவிட்டது
காற்றில் கலந்தது கனவு என்று
சொல்லி ஒன்றும் செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஊமைகளாக.
காற்றில் கலந்தது கனவு என்று
சொல்லி ஒன்றும் செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஊமைகளாக.
நீ ஏந்திக்கொண்ட சுடரினை
விளக்கினில் ஏற்ற முடியாத
மூடர்களாவே இன்றும் இருக்கிறோம்.
விளக்கினில் ஏற்ற முடியாத
மூடர்களாவே இன்றும் இருக்கிறோம்.
நீ கொண்ட நோக்கத்தினை அடைய முயற்சி
பல செய்தாய் அது சுயநலவாதிகளின் சூழ்ச்சியால்
தகர்ந்துப் போகவே உன் உயிரையே ஆயுதமாக்கினாய் அநீதிகளுக்கு எதிராக.
பல செய்தாய் அது சுயநலவாதிகளின் சூழ்ச்சியால்
தகர்ந்துப் போகவே உன் உயிரையே ஆயுதமாக்கினாய் அநீதிகளுக்கு எதிராக.
காற்றில் கலந்து உன் கனவு மட்டுமே
காலத்தில் கலந்து விட்டது உன் வாழ்வே
சமூக நீதிக்கொரு பெயராக என்றும் அனிதா இருக்கும்.
காலத்தில் கலந்து விட்டது உன் வாழ்வே
சமூக நீதிக்கொரு பெயராக என்றும் அனிதா இருக்கும்.
இன்றளவும் உன்னை அரசியல் லாபத்திற்கு
அடமானம் செய்கின்ற பலர் இருக்கின்றனர்
அற்ப பதறுகளாக.
அடமானம் செய்கின்ற பலர் இருக்கின்றனர்
அற்ப பதறுகளாக.
நீ தந்து சென்ற அறிவையும் பயன்படுத்தாமல்
போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல்
தியாகத்தையும் நினைக்காமல் சிலரைத் தவிர்த்து பலர்சென்றுகொண்டிருக்கிறோம் பேதைகளாகவே.
போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல்
தியாகத்தையும் நினைக்காமல் சிலரைத் தவிர்த்து பலர்சென்றுகொண்டிருக்கிறோம் பேதைகளாகவே.
இந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு வரப்போகிறது.
இன்றளவு மட்டும் எண்ணி விட்டு இவ்வாறே கடந்து செல்ல தான் போகிறோமா?
இன்றளவு மட்டும் எண்ணி விட்டு இவ்வாறே கடந்து செல்ல தான் போகிறோமா?
ஆட்சியில் மாற்றம் வந்து விட்டால் இந்த அநீதி மாறிவிடுமா?ஆட்சி மாறினாலும் அநீதியை மாற விடுவார்களா?
இதிலுள்ள அரசியல் கட்சிகளுகிடையே ஆனதா?
இது வெறும் தேர்தல் அரசியல் அல்ல என்பதை முதலில் உணர்க.
இது ஆதியில் இருந்து தொடர்ந்து வரும் அதே சமூக ஆதிக்க அடக்கு முறை தான்.
அதை வெளிக்கொணர்ந்து அதை எதிர்த்து எடுக்கும் நடவேடிக்கைகளே முற்போக்கான நடைமுறையில் மாற்றத்தைத் தருவதாக இருக்கும்.
அதுவே அநீதிகளை அறவே அறுத்து அனிதாக்களைப் பேணுவதாக இருக்கும்.அதை விடுத்து நாம் மேற்கொள்பவைகள் பயனளிக்காது நம்மை காற்றில் கலையச் செய்வதாகத் தான் இருக்கும்.
~இராசை இராம்
Comments
Post a Comment