Skip to main content

"நான் பெற்ற விருதுகள்"



நான் பெற்ற விருதுகள் பற்பல இருந்தாலும்
அவற்றில் இங்கே சிற்சில.

நான் பெற்ற முதல் விருது.
நான் பெற்றது விருது என அறியா
நாள் முதலே என்னை வந்தடைந்த விருது அது
நான் எண்ணும் எண்ணம் யாவும்
நன்கறிந்த விருதும் அதுவே
நான் இன்பம் துன்பம் பகிர
நாடும் முதல் விருதும் அவ்விருதே

மகிழ்வைத் தர வந்த விருது அது
மற்றார் மனம் வருந்தா வண்ணம்
மனங்குளிர எப்பொழுதும் சுற்றதார்க்கு
மகிழ்வை மட்டும் தரவல்ல நற்விருது அது.

பகுத்தறிவை காட்டி  என்
பார்வைதனை மாற்றி வாழ்வில்
பண்பட வைத்த விருது அது.
பழகிய நாள் முதலே இனம்புரியா
புரிதலுண்டு அதுவுடனே
பிறருக்கது புரிந்திடாது, அவ்விருது
புரிந்த செயலில் என்னை
பிரமிக்க வைத்து விட்ட விருது அது.

உற்ற கருத்தில் மாறுபாடு இருக்கும்
ஊரைச் சுற்றவில்லையெனில் கோபம் கொள்ளும்  விருது அது
ஊரே சுற்றி எதிர்ப்பினும்
உடன் இருந்து ஊரை எதிர்க்கும் விருதும் அதுவே

நட்பென்ற சொல்லிற்கு விளக்கமாய்
நிற்கும் விருது இரண்டு
நீங்கலான உறவிற்கு
நீண்டு வரும் விருதுகளும் அதுவே

கேலி பல செய்தாலும்
கேள்வி எதும் கேட்காமல்
கேட்டதை உடனே செய்துதரும் விருது அது.

விளையாட்டின் மூலம் சேர்ந்துப் பழகி
வெற்றிகள் பல பெற்று தந்து
விழாக்காலங்களில் கூடி மகிழச் செய்து
வெண்மையான உள்ளங்கள் கொண்ட
விருதுகளும் பலவுண்டு.

பள்ளிகளில் நான்
பெற்ற விருதுகள் இன்னும்
பல நூறு இருக்கு அவற்றைப்
பற்றி சொல்ல முனைந்தால்
பக்கம் யாவும் முடிந்து விடும். ஆதலால்
பணிவோடு மனதில் வைத்து
பொறுப்போடு எடுத்து செல்கிறேன் விருதுகளை.

கல்லூரியில் கற்றுக்கொண்ட
கல்வியென்பது சொற்பமாயினும்
கண்டெடுத்த விருதுப்பல
காலமெல்லாம் உடன் வருது.

சென்ற முதல் நாட்களிலே
சேர்ந்துக் கொண்ட விருதுகள் அது.
சென்று விட்ட இடம் வேறு வேறு என்றாலும்
சிரித்து மகிழ்ந்த நினைவை நாளும் தரும் விருது அதுவே

சுற்றித் திரிந்த தினமெல்லாம்
சிறிதும் கூட பிரிந்திடாமல்
சூழ்ந்திருந்த விருதுகள் உண்டு.
வெற்றி தோல்விதனை சமமாக
வைத்துப் பார்க்கும் இயல்வு கொண்ட
வியந்து பார்த்த விருதுகள் உண்டு.

இசையெனும் ஈர்ப்புதனால்
இணைந்து விட்ட விருது அது.
இன்பம் வந்த போதிலும் துன்பம்
இயைந்த போதிலும் உடன்
இருந்து ஆட்படுத்திய பெருமை கொண்ட விருது அது.

சிறிது காலம் பழகி விட்டு
சற்றும் கூட மறக்காத நினைவலைகள்
சிறுக சிறுக பல தந்து
சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும்
சிறப்பான விருதுகளும் பலவுண்டு.

எண்ணில் அடங்கா விருதுகள் பல
என்னை வந்து சூழ்ந்துகொள்ள
எல்லா விருதுக்கும் தகுதியென
என்னை நானும் சொல்ல மாட்டேன்.
எப்படியேனும் அத்தகுதிதனை
என்னிடத்தில் பெற்றுக்கொள்ள
ஏனைய முயற்சிகளை செய்திடுவேன்
எந்நாளுமே


"தோழர்கள் அனைவருக்கும்
தோழமை தின வாழ்த்துக்கள்"



Comments

Post a Comment

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...