Skip to main content

"ஒரு சிப்பியில் விளைந்த இரு முத்துக்கள்"



ஒரு சிப்பியில் விளைந்த இரு முத்துக்களைப் போல் கருவில் இரண்டாய் உருவானோம்..

பந்தலில் படரும் கொடிகளைப் போல பிணைந்தே உருப்பெற்றோம்..

சிறு இடைவெளி கூட இல்லாமல் கருவில் சேர்ந்திருந்த நாம் சில நிமிட இடைவெளியில் வெளி வந்தோம் உலகிற்கு..

தாயும் உணவு என அவள் குருதியை உணவாக்கி சமமாய் ஊட்டி வளர்த்திட்டாள்..

தந்தையும் என்றுமே அவர் இரு கண்ணென காத்திட்டர் சமமாய் அன்பையும் பொழிந்திட்டார்..

அண்ணனும் பெற்றிட்டான அவன் இணைப்பிரியா இரு நண்பர்களை ஒரு சேர..

சுற்றாரும் கொண்டாடினார்கள் இரட்டை முத்துக்கள் பிறந்ததை எண்ணி..

கண்டவர்கள் யாவரும் நெகிழ்ந்தனர் இரட்டிப்பாகவே நாங்கள் இரட்டையர் என்பதாலே..

அழுகைச் சேர்ந்த தொடங்கியாதலோ எப்போதும் அதுச் சேர்ந்தே வரக் கண்டோம்..

எனக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அது உனக்கும் பரவிடுமோ காற்று பரவுவது போல..

பயின்றோம் போட்டி போட்டு அதானால்
தேறினோம் தேர்வில் யாதும்..

இதயம் வேறு என்றாலும் உள் என்றும் ஒன்றே நினைத்திட்டோம்..

உணர்ச்சி வேறு என்றாலும் எப்போதும் உணர்வுகள்  ஒன்றெனக் கொண்டோம்..

துன்பம் வந்த போது அதை இரண்டாய்ப் பிரித்துக் குறைத்துக்கொண்டோம்..

மகிழ்ச்சி வரும் போது அதைப் பகிர்ந்து இரட்டிப்பாக்கினோம்..

அன்பையும் பகிர்ந்திட்டோம் அதைப் பிறருக்கும் கொடுத்தே மனம் மகிழ்ந்தோம்..

மனக்கசப்பு வந்தாலும் அது எடுத்துக் கொண்டது அரை நிமிடமே தான்..

உடல் இருப்பது தூரம் என்றாலும் மனம் இருப்பது  நெருங்கியே தான்..

இரு வேறு ஆசைகள் கொண்டாலும் நிறைவேற்ற எண்ணிட்டோம் முதலில் நம்முள் பிறரின் ஆசையைத் தான்..

இரட்டையர் என்பதாலே நான் இழந்தது ஏதும் இல்லை.நான் பெற்றதே மிக அதிகம்..

இரட்டையர் என்பதாலே நீ இழந்தது சில இருக்கு.அதில் முதன்மை உன் கனவு..

என்னால் நடந்ததனால் அதைப் போக்கிட தவித்ததுண்டு.ஆனால் போக்கிட பாடில்லை.அந்த குற்ற உணர்வு இன்னுமுண்டு.

நீ கிடைத்தது எனக்கு பெருமை ஆகும். உன்னைப் பிரிந்து இருப்பதே  பெருந்துயராகும்..

உலகில் அரிதாய்ப் பிறந்திட்டோம் உலகில் உள்ள சொற்ப இரட்டையர்களின் நாமும் இரட்டையராய்..

பிரிவு வந்து போகும் ஆனால் அது ஒருவரென்றால் பாதிப்புக்குள்ளாக்கும்.
நாம் இரட்டையர் என்பதால் அது நம்மைக் கண்டு தூரம் போகும்..


அன்பைப் பெற்றோம் இரட்டிப்பாக,
அதை யாவர்க்கும் பகிர்ந்தோம் இரட்டிப்பாக, நற்பண்பையும் பெற்றோம் இரட்டிப்பாக, அதன் வழியே நடந்தோம் மகிழ்வாக, ஆதலால் என்றும் வாழ்வோம் சிறப்பாக, அதை நீ மட்டும் மனதில் வைத்துக்கொள் உறுதியாக..!!


                                          ~இராசை இராம்

Comments

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...