இரவு நேர வேளை பள்ளிபாடத்தை வேகமாக முடித்து; வந்து விடுவோம் தெருகளுக்கு.. வந்து விட்டார்கள் என சலித்துக் கொண்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள் வாசலில் வீட்டு கதை பேசும் அம்மாமார்கள், அத்தைமார்கள், பாட்டிமார்கள்.. ஒரு சில ரசிக்கும் திறன் கொண்டோரே அமர்ந்திருப்பார் வாசலிலே.. நாங்கள் அனைவரும் வந்துவிட்டோமா என்று சோதித்து விட்டு; வராதவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீடுகளில் சில பல திட்டுகள் காதுகளில் வாங்கிக்கொண்டும் அவர்களையும் கையோடு அழைத்து வந்து விடுவோம்.. பெரும்பாலும் கண்ணாமூச்சியே விளையாடிக் கழிப்போம்.. அடுத்தவர் வீடுகளுக்குள் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொள்வோம்.. பல முறை அந்த வீட்டுக்காரர்களிடம் சிக்கித் திட்டு வாங்கிக் கொண்டும், நிறைய நேரம் ஆகியும் நீ கண்டுபிடிக்காததால் தானாக வந்தாக சொல்லி வெளி வந்து விடுவோம்.. ஒருசில வீட்டுக்காரர்கள் ஒளிந்தது தெரிந்தும் கண்டுபிடிப்பவர் கேட்டால் யாரும் இல்லையே என்று சொல்லி விளையாட்டுக்குள் அவர்களும் சேர்ந்துகொள்வர்.. 10 மணி நெருங்கும் போது கண்டுபிடிக்க வருபவரை வர சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்று ...